நெஞ்சு பதறுகிறது., திமுக அரசின் ஊழலோ ஊழல்., வெளியான அதிர்ச்சி அறிக்கை.! - Seithipunal
Seithipunal


நெஞ்சு பதறுகிறது இந்த ஊழல் திமுகவை நினைத்துவிட்டால், இப்படியெல்லாம் ஊழல் செய்ய முடியுமா பொங்கல் தொகுப்பில்? என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தின் அடையாளமான பொங்கல் பண்டிகையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படைத்து, பின்னர் தானும் உண்டு தெய்வமாக வழிபடும் கால்நடைகளுக்கு கொடுத்து வணங்குவது தமிழர் மரபு.

மனசாட்சியே இல்லாமல் ஈ, எறும்பு மொய்க்காத ஆந்திரா வெல்லம், மிளகு என்ற பெயரில் இலவம்பஞ்சு, பப்பாளி கொட்டை, மிளகாய் மரத்தூள்..., இதுதான் விடியல் ஆட்சியா?

பொங்கல் தொகுப்பு கொடுக்க துவங்கிய பொழுதே, ஊழலை பட்டியலிட்டது பாஜக. ஆனால் பொங்கல் முடிந்த பின்னும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் கல்லும், மண்ணும் கலந்த தொகுப்பைக் கொடுத்து ஊழலோ ஊழல்.      

புளியில் இறந்த பல்லி கிடந்ததை கண்டுபிடித்து சொல்லியவரை கைது செய்து, அவர் மகன் மரணத்திற்கு காரணமானது திமுக அரசு. இதற்கு என்ன பதில் சொல்வார் தமிழக முதல்வர்?

இதுவும் விஷமிகளின் விஷப்பிரச்சாரம் என்பாரா? இக்கொடுமை நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்டம் தாக்கானம்பாளையம் ஊராட்சி ராஜபாளையம் நியாயவிலைக்கடையில். 

தங்கள் உயிருக்காக பதறும் மக்களுக்காவது பதில் சொல்வாரா தமிழக முதல்வர்? என்று ஜி.கே நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

g k nagaraj say about pongal gift


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->