வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் பிரச்சனை., கத்தியால் குத்திக்கொண்டு நண்பர்கள்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்ட சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி மற்றும் சின்னவேடம்பட்டி சேர்ந்த தனுஷ்குமார் என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே வீரபாண்டி மற்றும்  தனுஷ்குமார் இடையே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் முற்றிவிடவே தனுஷ்குமார் தன் நண்பர்களான மோகன்ராஜ், கார்த்திக், அருண், அஜித் குமார், சதீஷ்குமார், சந்தோஷ் குமார் உள்ளிட்டோரை துணைக்கு அழைத்து வந்து வீரபாண்டியை கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.
 
இதைத்தொடர்ந்து, வீராபாண்டிக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு வந்த பிரசாந்த், வசந்தகுமார், கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் தனுஷ்குமார் தரப்பினரை பதில் தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியதில் தனுஷ்குமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 

 வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்க்காக இருதரப்பினரிடையே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனுஷ்குமார், அருள், அஜத்குமார், சந்தோஷ்குமார், பிரசாந்த், வீரபாண்டி, வசந்தகுமார், கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது காவல்நிலையம் அழைத்து சென்று அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

friends attack one by one for whatsapp status


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->