நான்கு புதிய திட்டங்கள்! நெல்லை, தூத்துக்குடி மக்களுக்காக நலத்திட்ட உதவி!- முதலமைச்சர்
Four new schemes Welfare assistance for the people of Nellai Thoothukudi Chief Minister
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தலுக்காக கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.அதனடிப்படையில் தற்போது தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு சென்றுள்ள அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அதில் இன்று விழாவில் பங்கேற்ற அவர் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்களை அறிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அப்போது அவர் தெரிவித்ததாவது," முதலில்,தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும். இரண்டாவதாக நெல்லையில் உணவு பதப்படுத்தும் மண்டலம் அமைக்கப்படும்.மூன்றவதாக தூத்துக்குடி, நெல்லையில் முருங்கை ஏற்றுமதி புது மையம் ரூ.5.55 கோடியில் அமைக்கப்படும்
.நான்காவதாக கப்பல் தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான தளம் தூத்துக்குடியில் அமைக்கப்படும்" என்று அறிவித்தார், இதனை கேட்ட மக்கள் மகிழ்ச்சியில் பூரித்தனர்.
English Summary
Four new schemes Welfare assistance for the people of Nellai Thoothukudi Chief Minister