பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தோல்வி.!!
former punjab cm amarinder singh
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாபில் 117 தொகுதிகள், உத்தரகண்டில் 70 தொகுதிகள், 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 தொகுதிகளுக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 117 தொகுதியில் கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவை. ஆனால், தற்போது ஆம் ஆத்மி கட்சி 90-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, ஆட்சியைப் பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
இதனிடையே, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்துள்ளார். தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கி பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
English Summary
former punjab cm amarinder singh