சசிகலாவுக்கு சாட்டையடிகொடுத்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்.. வேற லெவலில் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தொண்டர்களால் அமைக்கப்பட்ட கழகம் அதிமுக கழகம். தொண்டர்களில் ஒரு உறுப்பினராக தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப எம்.ஜி.ஆர் தலைமை பொறுப்பேற்றுக்கொண்டார். 

எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர்கள், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் தலைமை ஏற்க பலரும் முயற்சித்து அவர்கள் காணாமல் போனார்கள். சசிகலா எங்கே இருந்தார் என்பது தெரியாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக வந்தவர். சசிகலாவுக்கும் - அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

அதிமுக தலைமையை அபகரிக்க பல வழக்குகள் தொடுத்தார்கள். நீதிமன்றம் சரியான தீர்ப்பளித்து இருந்த நிலையில், டிடிவி விலகிக்கொண்ட போதிலும், சசிகலா தொடங்கு வழக்கு நடத்தினர். இறுதியாக உச்சநீதிமன்றம் அதிமுக திரு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சொந்தம் என்றும், இரட்டை இலை அவர்களுக்கு தான் என்றும் தீர்ப்பளித்தது. 

சசிகலா, டிடிவி தினகரன் எந்த வேஷம் போட்டாலும் எடுபடாது. எங்களின் பெரியவர் காளிமுத்து சொல்வதை போல், கருவாரு மீன் ஆகாது. கருவாரு ஒருவேளை மீன் ஆனாலும், சசிகலா அதிமுகவின் உறுப்பினராக வர முடியாது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Minister CV Shanmugam Pressmeet about Sasikala 7 June 2021 AIADMK Office Villupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->