பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!
Former Indian cricketer joins Punjab Aam Aadmi Party state assembly
ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 92 தொகுதிகளை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி கட்சி. இதில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதலமைச்சராக பகவந்த்மான் பதவியேற்றார்.
இந்த நிலையில் பஞ்சாப்பில் அடுத்த மாதம் மேல் சபை உறுப்பினர்களின் எம்பி பதவி முடிவடைகிறது. இதனையடுத்து காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்ப ஆளும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது..இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Former Indian cricketer joins Punjab Aam Aadmi Party state assembly