இன்று மாலை வெளியாகப்போகும் இறுதி பட்டியல்.. ஆவலுடன் அரசியல் கட்சியினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிக்கு 6,818 பேரும், நகராட்சிக்கு 12,171 பேரும், பேரூராட்சிக்கு 20,847 பேரும் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பு மனுக்கள் அனைத்தும் மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி உள்ளதா.? என பரிசீலிக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்வாறு பரிசளிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இல்லாத வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒரு கட்சியின் முக்கிய வேட்பாளரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அக்காட்சியின் மாற்று வேட்பாளரின் வேட்பு மனு தானாக ரத்து செய்யப்படும். 

இதையடுத்து, திரும்பப் பெறப்பட்ட வேட்புமனுக்களை தவிர்த்து இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிடும். இதனை தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும். அதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு  அவர்களுக்கு சின்னமே ஒதுக்கப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

final candidate list today evening


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->