திமுக கூட்டணி கட்சி கூட்டத்தில் பொளேர்.! மாநிலத் தலைவர் மண்டை பளார்.!
fighting at dmk congress meeting
கன்னியாகுமரியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டு மீனவர் அணி மாநில தலைவரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் எம்பி வசந்தகுமார் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என்று நிர்வாகிகள் பலரும் பங்கேற்று இருந்தனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் எம்பி வசந்தகுமாருக்கு எதிராக காங்கிரஸ் மீனவர் அணி மாநில தலைவர் சபின் பேசி இருக்கின்றார். இதன் காரணமாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவர் மற்றொரு பிரிவினரை நாற்காலிகளை தூக்கி வீச இருதரப்பினரும் நாற்காலிகளை தூக்கி வீசி பலத்த அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் மீனவர் அணி மாநில தலைவருக்கு மண்டை உடைந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும் அப்புறப்படுத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்த இருக்கின்றனர்.
English Summary
fighting at dmk congress meeting