ஓபிஎஸ் பின்னால் அணி திரளும் இபிஎஸ் அணியினர்.! விரைவில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.!!
eps team members join ops team
அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். இதனால் ஓபிஎஸ் அதிமுகவில் பொறுப்புகள் கிடைக்காமல் இருக்கும் அதிருப்தியார்களை ஒன்று திரட்ட முடிவு செய்துள்ளார். அதிருப்தியாளர்களும் ஓபிஎஸ் பின்னால் அணி திரள தயாராக உள்ளனர்.
அதிமுகவை ஓ பன்னீர்செல்வம் அழிக்கப்பார்க்கிறார் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். ஆனால், அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிக்கப்பார்க்கிறார், நாங்கள் அதிமுகவை காப்பாற்ற போகிறோம் என்று ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சட்ட போராட்டத்தினை தொடங்கி உள்ளனர்.
இதனிடையே ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் அதிருப்தியாளர்களை புதிய நிர்வாகிகளாக நியமிக்க திட்டமிட்டுள்ளார். தற்போது புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரை சார்ந்த மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக இருக்கும் பல அதிமுகவினர் ஓபிஎஸ் தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதிமுகவை காப்பாற்ற நாங்களும் உங்களுடன் போராட தயார் என உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஓ.பி.எஸ் தரப்பில் விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளிவர உள்ளது. ஜெயலலிதா காலத்திலே அதிமுகவில் உருவாக்கப்பட்ட பின்னர் அகற்றப்பட்ட தொகுதி செயலாளர், ஊராட்சி செயலாளர்கள் பதவிகளை மீண்டும் உருவாக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரானதும், ஓ.பி.எஸ் பொதுக்குழுவை கூட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
eps team members join ops team