வீராப்பைக் காட்டாமல்.. "மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்க".. மு.க ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் அட்வைஸ்.!!
eps condemn DMK govt tnstc protest negotiation
போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களின் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில முடிந்ததை. இதனை அடுத்து இன்று இரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட உள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களின் ஆறு அம்ச கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தெளிவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம் என்றும், இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்" என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தது.
குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. அரசு தனது வீராப்பைக் காட்டாமல், லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
eps condemn DMK govt tnstc protest negotiation