#BREAKING:: அடுத்த அதிரடி.. "ஏப்ரல் 20ல் மாவட்ட செயலாளர் கூட்டம்".. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!!
EPS announced AIADMK district secretary meeting held on April20
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 20ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவசர அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் நடைபெற உள்ள இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தயாராக கூடிய வகையில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
அந்த தீர்மானத்தில் அதிமுகவின் மக்கள் நல சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும், மக்களுடைய ஆதரவை கட்சிக்கு பெறுவதிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அதனை உணர்ந்து அனைத்து தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் அடங்கிய பூத் கமிட்டி அமைப்பதில் கழக நிர்வாகிகள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, பூத் கமிட்டியில் இடம் பெறும் நிர்வாகிகளின் விபரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தான அறிவுரைகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
EPS announced AIADMK district secretary meeting held on April20