சட்டப்பேரவை சடுகுடு: நேக்கா லீக் செய்த துரைமுருகன்..! ஷாக்காயி தூக்கி அடித்த எடப்பாடி.!
edappadi replied to duraimurugan speech
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும்கட்சிகள் பல்வேறு விமர்சனங்கள் பதிலடிகளை கொடுத்து வருகின்றன. அவ்வப்போது, விவாதம் முற்றிய நிலையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை விவாதத்தின் பொழுது திமுக பொருளாளரான துரைமுருகனுக்கு, முதல்வர் எடப்பாடி பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கையில், துரைமுருகன், "தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கின்றது. என்னுடைய கவலையெல்லாம் அடுத்ததாக எங்கள் திமுக ஆட்சி அமைத்த பின்னர் எங்கள் தலைவர் இந்த கடனை எப்படி சமாளிக்க போகிறார் என்பது தான்." என்று தெரிவித்தார்.
அப்பொழுது, துரைமுருகன் என்ன கூறுகிறார் என்பதை சுதாரித்து கொண்ட முதலவர் எடப்பாடி பழனிசாமி, "அந்த கவலை எல்லாம் உங்களுக்கு தேவையில்லை. அப்படி ஒரு நிலை உங்களுக்கு கண்டிப்பாக வராது." என்று கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
English Summary
edappadi replied to duraimurugan speech