பாவம் அதுக்கு ஒன்னும் தெரியாது.!! ஆளுநர் தமிழிசையை கலாய்த்த துரைமுருகன்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்ட புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் ஊழல் வழக்கில் கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு "எதிலும் ஏடாகூடமான காரியத்தை செய்பவர் நமது ஆளுநர். கொஞ்சம் பரபரப்போடு செயல்படுவர் அவர். அதிலே ஒன்றுதான் இதுவும்” என பதிலளித்தார்.

மேலும் நீட் எதிர்ப்பு தேசத்திற்கான எதிர்ப்பு என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியது குறித்ததான கேள்விக்கு  “அய்யய்யோ அவங்க ரொம்ப பெரியவங்க, பாவம் அதுக்கு ஒன்னும் தெரியாது”என நையாண்டித்தனமாக பதிலத்த துரைமுருகன் பொன்முடிக்கு நீதிமன்றம் விலக்கு அளித்தது குறித்தன கேள்விக்கு, "அது வரவேற்கத்தக்கது" என பதிலளித்ததோடு வெள்ளம் காரணமாக 760க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்வதற்கான மதிப்பீடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். சேதமடைந்த கால்வாய்கள் மற்றும் மதகுகள் உள்ளிட்டவற்றை சரி செய்ய சுமார் 2000 கோடிக்கு மேல் ஆகும் என எங்கள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என கூறியவாறு புறப்பட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan criticized governor tamilisai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->