தயாநிதி மாறன் பேசியதில் தவறு இல்லை.!! துரை வைகோ வக்காலத்து.!! - Seithipunal
Seithipunal


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வீடு கட்டி தருகிறான், சாலையைச் சுத்தம் செய்கிறான், டாய்லெட் கழுவுகிறான். இதுதான் இந்தி படித்தவர்களின் நிலை”  என பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  திருநெல்வேலியில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தயாநிதி மாறனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.


அதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்ம் தயாநிதி மாறன் இந்தி பேசும் மக்கள் குறித்து பேசியதில் எந்த தவறு இல்லை. ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டட வேலை, சாலை பணி உள்ளிட்ட சாதாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கடைபிடித்ததால் அதிகமாக ஆங்கிலத்தை கற்றனர்.  அதனால் உலக அளவில் பெரிய பதவிகளில் தமிழர்களால் வர முடிந்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தயாநிதி மாறனின் பேச்சை வெட்டி ஒட்டி மக்களிடம் பரப்புகின்றனர். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அதேவேளையில் தமிழக பாஜகவும் தரம் இல்லாத அரசியலை செய்து இதனை பரப்பி வருகின்றனர் என துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

durai vaiko said no mistake in what Dhayanidhi Maran spoke


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->