15-வது குடியரசுத் தலைவராக இன்று திரௌபதி முர்மு பதவியேற்பு.!!
Draupadi murmu will take oath as the president today
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 63 சதவீதம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து, நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொள்கிறார். பாராளுமன்ற மையம் மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவி ஏற்ற பிறகு அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும். அதன் பிறகு அவர் குடியரசு தலைவர் மாலைக்கு அழைத்து செல்லப்படுகிறார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்த உள்ளார்.
English Summary
Draupadi murmu will take oath as the president today