கோதாவரி - காவிரி இணைப்பு குறித்த ஆலோசனை மகிழ்ச்சி: ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, சம்பந்தப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கோதாவரி-கிருஷ்ணா,  பெண்ணாறு- காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை அவசர ஆலோசனை நடத்தவிருப்பது வரவேற்கத்தக்கது!

2022- 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த  கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கடந்த 4-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்த சூழலில் 5 மாநில ஆலோசனை நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்; திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என நாளையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Godavary Cavery River Joint Feb


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->