இது அநீதி! உயர்நீதிமன்றத் தடையை விலக்கச் செய்து முதலில் இதை முடிக்க வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அநீதி!

ஒரே பள்ளியில் முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்குத் தான் இட மாறுதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முன்பாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டால்,  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு  விரும்பிய இடமாறுதல் கிடைக்காது!

உயர்நீதிமன்றத் தடையை விலக்கச் செய்து முதலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வையும், பின்னர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வையும் நடத்த வேண்டும். அது தான் அனைவருக்கும் சமவாய்ப்பு, சமநீதி வழங்குவதாக அமையும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbiumani Say about Postgraduate Teacher Transfer Consultation


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->