திமுகவின் முதல் எம்பி.,யின் பேரன் நீடு புகுந்து வெட்டி படுகொலை.!
dmk mp grand son murder in namakkal
திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினரின் பேரன் இன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் சோமசுந்தரம். இவரின் பேரன் ராஜேந்திரன். இவர் நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்.
சோமசுந்தரம் பேரன் ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் ராஜேந்திரனை வீடு புகுந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
ராஜேந்திரனின் மரண ஓலத்தை கேட்ட அருகில் இருந்த மக்கள் காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கூலிப்படை குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dmk mp grand son murder in namakkal