பிரியாணி, பச்சி, துணிக்கடையை தொடர்ந்து இறந்து கிடந்த பிணத்திடம் திருடிய திமுக தொண்டர்!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை கம்பன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் என்பவர் தனது மனைவியுடன் காரில் தஞ்சாவூருக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். கந்தர்வகோட்டை சாலையை அருகே அவரின் கார் சென்றபோது, அங்குள்ள பாலத்தில் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் சண்முகசுந்தரம். மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, அந்தவழியாக வந்தவர்கள், விபத்தில் உயிரிழந்த கணவன், மனைவியை பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த சோகமான நேரத்திலும் திமுக கரைவேட்டி கட்டிய தொண்டர் ஒருவர் இறந்துகிடந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடுகிறார் . கூட்டத்தில் பலர் திரண்டிருந்த நேரத்திலும், மிகவும் சிரமப்பட்டு அந்த மோதிரத்தை திமுக கரைவேட்டி கட்டிய தொண்டர் உருவியது  புகைப்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது. விபத்து நடந்தவுடன் உதவிக்கு ஓடிவரும் நபர்களிடையே, இப்படிப்பட்டவர்களும் இருப்பது மனிதநேயம் குறித்த கேள்வியை நம் முன்னே எழுப்புகிறது.
இதுவரை பிரியாணி கடை, பச்சி கடை, துணிக்கடை என கைவரிசை காட்டிய வந்த திமுகவினர், இப்போது விபத்தில் இறந்த கிடந்த பிணத்தின் மீது உள்ள நகைகளை திருடும் மனசாட்சியே இல்லாத நிலைக்கு சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk member stealing the ring from dead body


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->