திமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்.. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க அன்பழகன் கடந்த 7ஆம் தேதி மறைந்ததையடுத்து புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான பணியை திமுக தொடங்கியுள்ளது. 

திமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்வதற்காக திமுக பொதுக் குழுக் கூட்டமானது வருகின்ற 29ம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 15.3.2020 அறிக்கையின் வாயிலாக, திமுக பொதுக்குழு கூட்டத்தில் 29.3.2020 கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

16.3.2020 கடிதத்தின் வாயிலாக கழகப் பொருளாளர் துரைமுருகன் பொதுச் செயலாளர் பொறுப்புற்கு போட்டியிட விரும்புவதாகவும், எனவே அவர் தனது பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன். எனவே 29.3.2020 ஆண்டு நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என தெரிவித்திருந்தார். 

திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர்  பதவிகளுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்வதற்காக பொதுக்கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெற இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுக்கூட்டத்தை ஒத்திவைப்பதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk general committee postponed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->