சி.பி.எம் உடன் திமுக இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை.!!
DMK cpm 3rd round alliance discussion today
திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் திமுக இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10:30 மணியளவில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் சி.பி.எம் நிர்வாகிகள் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியதால் தொகுதி பங்கீடு உறுத்தியாகவில்லை.
ஆனால் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர். இத்தகைய சூழலில் இன்று நடைபெற்றும் 3ம் கட்ட பேச்சுவார்த்தை முடிவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
DMK cpm 3rd round alliance discussion today