திமுகவுடன் இன்று மாலை தொகுதி பங்கீட்டில் ஒப்பந்தம்.! வெளியான பரபரப்பு தகவல்.!
DMK CPI ALLIANCE TODAY EVENING FINAL
திமுக - இந்திய கம்னியூஸ்ட் கட்சிகளுக்கு இடையே இன்று மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது வரை இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், மனிதநேய மக்கள் கட்சி, விசிக-வுடன் கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிவாகியுள்ளது.
அதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விசிக-வுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுகவுடன் இன்று மாலை இந்திய கம்னியூஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை இலக்கத்தில் தான் தொகுதிகள் வேண்டும் என்று இந்திய கம்னியூஸ்ட் கட்சி கூறி வந்த நிலையில், தற்போது 6 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று மாலை 5 மணிக்கு திமுகவுடன் இந்திய கம்னியூஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
DMK CPI ALLIANCE TODAY EVENING FINAL