சரியான நேரம் பார்த்து திமுக பிரமுகரை தூக்கிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் திமுக!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தல் இன்னும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக தலா 7 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்றதால், ஒன்றியக்குழுத் தலைவர்,  துணைத்தலைவரை தேர்வு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது. 

இதனால் ஜனவரி 11 ஜனவரி 30 என இரண்டு முறை தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் திமுகவை சேர்ந்த 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வன், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து, அதிமுகவில் இணைந்தார். 

இதனையடுத்து கடமலை மயிலை ஒன்றியத்தில் அதிமுக பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒன்றியக்குழுத் தலைவர்,  துணைத்தலைவரை அதிமுக கைப்பற்றும் என தெரிகிறது. கவுன்சிலரை கோட்டைவிட்டதால் பதவியை பெரும் வாய்ப்பை இழந்த திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK counselor joined admk in front of OPS


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->