ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் கைது.!
DMK councilor arrested in auto driver murder case
ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் குமாரவாடி பகுதியில் குமார் என்பவர் இறந்த நிலையில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பிரேதபரிசோதனையின் போது குமாரின் உடலில் வெட்டு காயங்கள் இருந்ததால் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தாம்பரம் மாநகராட்சியின் திமுக கவுன்சிலர் தாமோதரன் மற்றும் அவரது மகனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
DMK councilor arrested in auto driver murder case