நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, சமீபத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆனால் இதுவரை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. அதற்கான அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்து போடுகிறோம். கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmdk no alliance for urban local body election


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->