கடலூர் : திட்டக்குடி அருகே மூன்று பட்டியலின பள்ளி மாணவர்களால் சக பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.! பதற்றம்., போலீஸ் குவிப்பு.!
cuddalore thittakudi school girl harassment
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவினங்குடி அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவர், அண்மையில் தனது ஆண் நண்பருடைய பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார்.
பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து அந்த பள்ளி மாணவியை மிரட்டிய பள்ளி மாணவர்கள் மூன்று பேர், தங்கள் வீட்டிற்கு வரவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், அதனை வீடியோ எடுத்து சக மாணவர்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்த வீடியோவை வைத்து மற்ற மாணவர்களும் மனைவியை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து பள்ளி மாணவி தனது தாயுடன் வந்து ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 3 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள், மாணவி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
cuddalore thittakudi school girl harassment