சர்ச்சை பேச்சு! சனாதான தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்...! - ஆளுநர் ஆர்.என்.ரவி
Controversial talk Thiruvalluvar greatest saint Sanatana Dharma Governor RN Ravi
திருச்சியில் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற ''ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்'' கோவிலில் நேற்று, ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபத்துக்கு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மஹாத்மியம், சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ''ஆர்.என்.ரவி'' பங்கேற்று புதிதாக கட்டப்படவுள்ள கோவிலின் 7 பிரகாரங்களை கொண்ட மாதிரி வடிவமைப்பினை திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர், ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யதுகிரி யதிராஜமடம் 41-ம் பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ யதிராஜா நாராயண ராமானுஜ ஜீயர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நூல்களை வெளியிட, அதனை தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு பெற்றுக் கொண்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி:
அதன் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தில் தெரிவித்ததாவது,"மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்று தான். அது சனாதன தர்மம் மட்டும் தான். பாரதம், ராஷ்ரியம், தர்மம் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.
சமூகமும், தர்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.திருக்குறள் ஒரு ஆன்மிக புத்தகம். முக்தி பற்றி பேசவில்லை என்று கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள். நாம் யார் என்பதை இன்றைக்கு வெளியிட்ட புத்தகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
அத்தகைய சிந்தனையை நமக்கு கல்வி பாடத்திட்டங்கள் கொடுக்கவில்லை. பாரத தேசம் ஒரு ஆன்மிக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்" எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து தற்போது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Controversial talk Thiruvalluvar greatest saint Sanatana Dharma Governor RN Ravi