வேண்டுமானால் என்னை தூக்கிலிடுங்கள் - காங்கிரஸ் எம்.பி., பரபரப்பு பேட்டி.!
Congress MP adhir ranjan chowdhury president issue
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையினர் சோனியா காந்தியிடம் விசாரணை மேற்கொண்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டார்.
இதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இன்று பாராளுமன்றத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தான் வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாகவும், தான் ஒருபோதும் இந்திய ஜனாதிபதியை அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
மேலும், நான் நேரடியாக குடியரசு தலைவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். வேண்டுமானால் என்னை தூக்கிலிடுங்கள். இதில் சோனியா காந்தியை ஏன் இழுக்க வேண்டும்?" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Congress MP adhir ranjan chowdhury president issue