நாடே எதிர் நோக்கும்.. தேர்தல் அறிக்கை எப்போது? நாள் குறித்த காங்கிரஸ்.!!
Congress manifesto release on March19
ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் இந்திய நாடாளுமன்றத்திற்கான மக்களவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் பாளையம் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் மாதம் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தலை அறிக்கை வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர்ஜெயராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கை வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Congress manifesto release on March19