மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினாா்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் உறுதி செய்தனர். 

அதனைத்தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், சோனியா காந்தியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress leader Sonia Gandhi returns home after being admitted to hospital


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->