#BREAKING || பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படி ஒரு முடிவெடுக்க மத்திய அரசு தீர்மானித்திருந்தால் அதனைக் கைவிட வேண்டும் என்று, பாமக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேச திருத்தம் கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வரின் அந்த கடிதத்தில், "அகில இந்திய ஆட்சிப் பணிகள் விதிகள் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். 

அகில இந்திய ஆட்சிப் பணிகள் விதி 1954 ஆம் ஆண்டு நாளில் திருத்தம் மேற்கொள்வது என்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது" என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அந்த கடிதம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM STALIN LETTER TO PM MODI JAN 23


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->