பிரபல பத்திரிக்கையாளர் விபத்தில் மரணம்.. முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


ஊடகத்துறையில் 19 ஆண்டுகாலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி ஹிந்து நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஊடகத்துறையில் 19 ஆண்டுகாலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி ஹிந்து நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் அவர்கள் (29.5.2022) அன்று இரவு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

கார்த்திக் மாதவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் சிறப்பு நேர்வாக,  கார்த்திக் மாதவன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin condolences for karthik mathavan death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->