#கடலூர் || அண்ணாமலை முன்னிலையில்.. பாஜகவினர் இடையே மோதல்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்ச்சான் மற்றும் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி ஆகியோருக்காக ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கை மச்சானை ஆதரித்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை அடித்தட்டு மக்களுக்காக மத்திய பாஜக ஆட்சி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தங்கர்பச்சான் வெற்றி என்பது சாமானிய மக்களின் வெற்றியாகும்" என அவருக்காக வாக்கு சேகரித்தார். 

கடலூர் மாவட்டம் முத்துநகர் பகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போதே பாஜகவினர் ஒருவரை ஒருவர் தங்களுக்குள்ளேயே தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து அண்ணாமலை தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash between BJP cadres in Cuddalore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->