டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


டில்லியில் பாரத மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிடி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்து பேசியுள்ளார்.

இதன் போது தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி குறித்து ஸ்டாலின் வலியுறுத்தி பேசியதாக அவருடைய சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

குறித்த டில்லி பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 04:30 மணியளவில் இந்த சந்திப்பு நடக்கும் என தகவல் வெளியானது. இந்நிலையில்,பிரதமர் மோடியை ஸ்டாலின் பேசியபோது தமிழகத்தின் சார்ந்த கோரிக்கையை சார்ந்த மனுவை வழங்கியதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Stalin met Prime Minister Modi in Delhi


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->