முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!
Chhattisgarh Congress Ex CM ED Raid
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபானக் கொள்கை தொடர்பாக நடந்த மோசடி விவகாரத்தில், பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் சம்பந்தப்பட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,100 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த பின்னணியில், துர்க் மாவட்டம் பிலாய் பகுதியில் உள்ள பூபேஷ் பாகலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், சைதன்யா பாகல் மற்றும் அவருக்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பூபேஷ் பாகல் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தகவலில், "கடந்த 7 ஆண்டுகளாக இவ்வாறான பொய் வழக்குகள் தொடர்ச்சியாக தொடரப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தால் பலமுறை இவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்று என் வீட்டிற்குள் நுழைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 'விருந்தினர்கள்' போல் உள்ளே வருகின்றனர். இது விரைவில் வெளிச்சத்துக்கு வரும்" என்று கூறியுள்ளனர்.
English Summary
Chhattisgarh Congress Ex CM ED Raid