அதிமுகவில் மீண்டும் பரபரப்பு.. சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


சசிகலாவை சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தியாகராய நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபாகரன் EABL வடசென்னை கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் C. கிருஷ்டி, ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அச்சமயம் தி.நகர் சிவா அவர்கள் உடனிருந்தார்.

எழும்பூர் பகுதி 77வது வட்டத்தை சேர்ந்த மேபேமைப்பு பிரதிநிதி KA குமார், 13வது வட்ட முன்னாள் கழக துணைச் செயலாளர்  பரமசிவம், 77வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி V. கோபி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தன், 77வது வட்ட கழக அவைத் தலைவர் S.E. நம்பியார் மற்றும் எண்ணார் 2வது வட்டத்தை சேர்ந்து நகர முன்னாள் கழக துணைச் செயலாளர் டில்லி, திருமதி, தனலட்சுமி, கழக துணைச் செயலாளர் N. ஜீனத் பேகம், முன்னாள் நகரமன்ற கவுன்சிவர், நகர கழக பொருளாளர், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைத் தலைவர் பாஸ்கர், கழக சிறுபான்மையினர் பிரிவு துணைச் செய்வாளர் A இக்பால், G. மோசஸ் ராஜ், R. மகேப்பவரி, முகம்மது இப்பமாயில் ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அச்சமயம், சென்னை துறைமுகம் பகுதி கழக பொதுக்குழு உறுப்பினர் திருமின்னல் ரவி என்கிற மின்னல் போசன் அவர்கள் உடனிருந்தார்.

விருகை பகுதி 12வது வட்ட கழிக புரட்சித்தலைவி அம்மா பேரவை பொருளாளர் பெரிய தம்பி, பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த ரஞ்சித், 19வது வட்டத்தை சேர்ந்த திரு. செந்தில்குமார், புரட்சித்தலைவரின் ராமாவரம் தோட்ட இல்லத்தில் பணியாற்றிய உசிலை மாணிக்கம் ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அச்சமயம் விருகை பகுதி 129வது வட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் ஸ்ரீதேவி பாண்டியன் அவர்கள் உடனிருந்தார்.

புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த வேடசென்னை மாவட்ட இணைச் செயலாளர் V.சுந்தரமூர்த்தி (என்கிற) செங்கைசுப்பு அவர்கள் தலைமையில் V. சின்னப்பராஜ், கோகுல், N. சந்திரா, N. சந்தோஷ், விக்கி, கீர்த்திவாசன். B.A., R. தினேட் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் தலைமையை ஏற்று தங்களை அபி அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் கட்சியை வழிநடத்திட வரவேண்டும் என்றும், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவியின் வழியில் விரைவில் கழக ஆட்சி அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai admk members meet sasikala


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->