முன்கூட்டிய சட்டமன்றத் தேர்தல் நடத்த முதலமைச்சர் திட்டம்.. முக்கிய புள்ளி தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஓங்கோலில் மாநாடு நடத்தியது. அதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டார். 

வழியில் சிலகலுரிபேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது ஜெகனே வெளியேறு, ஆந்திராவை காப்போம் என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர் கூறியதாவது, தெலுங்கு தேசம் கட்சி மீது பழி வாங்குவதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கள் வீடுகளுக்கு தீ வைத்துக் கொள்கிறார்கள். 

தீயில் இருந்து அமைச்சர் குடும்பத்தினரை காப்பாற்றிய காவல்துறையினர், வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை என்பது சந்தேகமாக உள்ளது. இனிமேலும் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தை ஆளும் முடியாது.  அதனால்தான் திறமையற்ற அவர் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandrababu naidu says about andhra election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->