ரஜினிகாந்திடம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் - சந்திரபாபு நாயுடு.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ்வின் நூறாவது பிறந்தநாள் விழாவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குறித்து பெருமையாக ரஜினிகாந்த் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, ரஜினிக்கு ஆந்திர பிரதேச மாநில அரசியல் குறித்து தெளிவு இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் ரோஜாவின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நடிகர் ரஜினிகாந்திடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandra Babu Naidu reply Roja speech about Rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->