#BigBreaking : அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு.! அதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில், அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20 இடங்களிலும், சென்னையில் உள்ள ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மொத்தம் 100 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனைக்கு முக்கிய காரணமாக, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எம் ஆர் விஜயபாஸ்கர் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனையை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against ex minister mr vijayabaskar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->