பா.ஜனதா - அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு! பரபரப்பில் தொண்டர்கள்.!
BJP AMMK against case filed
தென்காசி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஆதரித்து பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால் பிரசாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்த ஒரு அனுமதியும் நயினார் நாகேந்திரன் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தேர்தல் பிரிவு அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பா.ஜ.க மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பா.ஜ.க மற்றும் அ.ம.மு.க காட்சி வட்டாரங்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
BJP AMMK against case filed