திர்ணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்கு அளிப்பதே மேல் - காங்கிரஸ் எம்.பி அதீர்!!
BJP than vote Better in Trinamool Better
மக்களவை தேர்தலுக்கான மூன்றாம்கட்ட வாக்குப்பதிவுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களில் இரண்டுகட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், வரும் மே- 7 தேதி மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறயுள்ளது.
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியில் திர்ணாமுல் காங்கிரசும் உள்ளது. மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திர்ணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடுயில் உடன்பாடு இல்லை.
காங்கிரஸ் எம்.பி அதீர் தொடர்ந்து திர்ணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறார். அந்த வகையில், காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதீர் பேசுகையில், பாஜகவை விட ஆபத்தானவர்கள் திர்ணாமுல். இந்த மக்களவை தேர்தலில் திர்ணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது மேல் என்று பேசினார்.
English Summary
BJP than vote Better in Trinamool Better