செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்க "இது தான் காரணம்".!! சினிமா பாடலை பதிவிட்ட பாஜக புள்ளி.!!
BJP Narayanan criticized DMK mkStalin senthilbalaji
பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் செந்தில் பாலாஜி தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார். கடலினை ஊழியர்கள் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் பதவி சரி போகிறது ஆனால் 230 நாட்களை கடந்துஇலாக இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருப்பது எப்படி என கேள்வி எழுப்பினார்.
மேலும் இதன் மூலம் சமுதாயத்திற்கு என்ன சொல்ல வரீங்க? என எழுப்பிய கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைதள பக்கத்தில் "செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்?
அமைச்சர் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? கடைநிலை ஊழியர் 48 மணிநேர சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே, சட்டம் அனைவருக்கும் சமம் தானே"- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் .
//காசு......பணம்......துட்டு.....Money.... Money. போடுவேன்டா மேடையில கால மேலகு ரங்கு கிட்ட மாட்டிகின சந்தன மால. காசு......பணம்......துட்டு.....Money....Money// " சினிமா பாடலை மேற்கோள் காட்டி பதிவிட்டு இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
BJP Narayanan criticized DMK mkStalin senthilbalaji