ஓட்டுக்காக இந்துக்களை ஏமாற்றும் செயலை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் - பாஜக எல்.முருகன்.! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி தொடங்கியுள்ள நடைபயணம் காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் ஆரம்பகட்டப் பணிகள் 95% முடிந்தது என்று தான் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்.

இந்து மக்களை ஆ.ராசா அவமதித்ததை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஓட்டுக்காக இந்துக்களை ஏமாற்றும் செயலை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், ராகுல் காந்தியின் நடைபயணம் ஆரம்பத்திலேயே தோல்வி. ராகுல் காந்தி இந்த பயணத்தை தொடங்கிய போதே கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து வெளியேறினர். அவர் காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பாஜகவினரின் வீடுகள், அலுவலகங்களை குறிவைத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்துகிறது. அந்த தாக்குதலை யார் செய்தார்களோ அவர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP L Murugan speech about DMK


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->