பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.! தென்காசியில் பரபரப்பு.. - Seithipunal
Seithipunal


கடையம் அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் அதிமுக, திமுக, பாஜக, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு பாஜக கொடிக்கம்பத்தில் இருந்து பாஜக கொடியை கீழே இறக்கி தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

இந்த கிராமத்தில் ஏற்கனவே மது போதையில் 2 பேர் பாஜகவின் கொடி கம்பத்தை சேதப்படுத்த நிலையில் தற்போது பாஜக கொடிக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் வன்முறை எதுவும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Flag fired in thenkasi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->