பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை முகலாயர்களுக்கு பிறகு வந்தவை.. அசாதுதீன் ஓவைசி.!
BJP and RSS after mugalayars
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை முகலாயர்களுக்கு பிறகு வந்தவை என்று ஹைதராபாத் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பாய்வாடியில் நடைபெற்ற அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்ததாவது,
இந்தியா என்னுடைய தோ, தாக்கரேவின் உடையதோ, மோடியுடதோ, அமித்ஷாவினுடையதோ அல்ல.
இந்தியா யாருக்காவது சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் தான் சொந்தம். பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை முகலாயர்களுக்கு பிறகு வந்தவை.
ஆப்பிரிக்கா ஈரான் மத்திய ஆசியா கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா வெற்றி பெறுவதை தடுத்து நிறுத்த, ஓவைசிக்கு ஓட்டு போடும்படி தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். தேர்தலுக்குப் பிறகு சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் திருமணம் செய்து கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP and RSS after mugalayars