பிஹார் முதலமைச்சர் ராஜினாமா! கவிழ்ந்தது பாஜக கூட்டணி ஆட்சி! - Seithipunal
Seithipunal


243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 இடங்களும், பா.ஜனதாவுக்கு 77 இடங்களும் கிடைத்தது. அதிக இடங்களில் பாஜக வென்றாலும், தேர்தல் ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆனார். 

இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு அதிக இடம், 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிதிஷ்குமார் முன்வைத்திருந்தார். 

இதனால், பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் விரிசல் விழுந்தது. கடந்த இரு நார்களுக்குமுன் பாட்னாவில் இரு கட்சியினரும் தனித்தனியாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி விரிவான ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று பேசியதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், சற்றுமுன் பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அளுநர் பாகு செளகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். இதன் மூலம் பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக் கொண்டார். மேலும் அம்மாநில எதிர்கட்சிகளான காங்கிரஸ், கம்னியூஸ்ட் உடன் கூட்டணிவைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar cm resign BiharPolitics nitish


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->