கரூர் ரகசியம்.. ஒரே பெண்ணுடன் அண்ணன் - தம்பிக்கு தொடர்பு.. வைரலாகும் அண்ணாமலை லீக்ஸ்.!!
Annamalai speaking at press meet has gone viral on social media
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் பொழுது பேசிய அண்ணாமலையிடம் பாஜக ஆதரவாளர் எஸ்.வி சேகர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு டென்ஷன் ஆகி ஆக்ரோஷமாக பதில் அளித்தார்.
குறிப்பாக "நான் யாருக்கும் விரோதி இல்லை. ஆனால் என்னை பழைய பஞ்சாகத்தை வைத்து கட்டுப்படுத்தலாம் என நினைத்தால் அது நடக்காது. யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன். அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய மனிதன் நான். என் அப்பா இப்படி, தாத்தா இப்படி இருந்தார்.

நான் 40 வருடமாக இருந்தேன் என்பதெல்லாம் உங்கள் வீட்டில் வைத்து கொள்ளுங்கள். இது எஸ்.வி சேகருக்கு மட்டுமல்ல அவருடன் இருக்கும் அனைவருக்கும் தான் இதை சொல்கிறேன்" என காட்டமாக பதிலடி தந்திருந்தார்.
இந்த விவகாரம் பாஜகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவு பெற்ற பிறகு பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தங்களது மைக்குகளை எடுத்துச் சென்றனர். அப்பொழுது ஒரு செய்தி நிறுவனத்தின் மைக் மட்டும் நிறுத்தாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது.

அப்பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அருகில் அமர்ந்திருந்த பாஜக நிர்வாகி பொன்பாலகணபதியிடம் பேசிய ரகசியம் அந்த மைக்கில் பதிவாகியுள்ளது. எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த பொன்பாலகணபதியை அழைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "அண்ணே இவனுங்க எல்லாம் மனுஷனா இருக்கவே தகுதி இல்ல.. ஒரே பொம்பளையே அண்ணன், தம்பி இரண்டு பேரும் வச்சிட்டு இருக்காங்க... கரூர்ல.. அவனுங்கள எப்படி மனுஷனா பார்க்க முடியும்" என பேசிய ரகசியம் மைக்கேல் பதிவாகியுள்ளது. இதைக் கேட்ட பொன்பாலகணபதியும் திருதிருவென முழித்தார். இந்த உரையாடலை செய்தி நிறுவனத்தின் கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதள வாசிகளும் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை பேசி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Annamalai speaking at press meet has gone viral on social media