தமிழகத்தில் போட்டியிடும் பிரதமர் மோடி - அண்ணாமலை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


வரும் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. நாடு முழுவதும் ஒரே கட்டமாக இந்த தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே சமயத்தில் பாதுகாப்பு மட்டும் பதட்டமான பாகுதிகளை கருத்தில்கொண்டு இரண்டு அல்லது மூன்று கட்டமாக தேர்தல் நடக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த மக்களவை தேர்தலுக்காக இப்போதே நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.

மத்தியில் ஆளக்கூடிய பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதற்கான வியூகத்தை வகுத்து வருகிறது. மாநில காட்சிகளை ஒருங்கிணைத்து பலமான ஒரு கூட்டணியை காங்கிரஸ் கட்சி உருவாக்க முயன்று வருகிறது. மேலும் மாநில கட்சிகள் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் சூழலும் நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்படை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கையில், "பிரதமர் மோடி இந்தியர் தான். அவர் நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அவர் மீது நாட்டு மக்கள் அனைவரும் அன்பும், பாசமும் வைத்துள்ளனர். 

தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறாரா? என்று என்னிடம் பலரும் கேட்கிறார்கள். தமிழகத்திலும் பிரதமர் மோடி அலை வீசுகிறது. நாங்கள் பாஜகவை வலிமை மிகுந்த கட்சியாக உயர்த்தி வருகிறோம். வருகிற மக்களவை தேர்தலில் இதனை நாங்கள் நிரூபிப்போம்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai say about PM Modi in Tamilnadu MP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->