காங்கிரசின் வெட்கக்கேடான செயல் இது! செங்கோல் விவகாரத்தில் அமித் ஷா கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வாட்ஸ்அப் பல்கலைக் கழகத்தின் தவறான செய்திகளுடன் புதிய பாராளுமன்றம் புனிதப்படுத்தப்படுவதில் ஆச்சரியம் உண்டா? 

அப்போதைய மதராஸ் மாகாணத்தில் ஒரு மத ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் மெட்ராஸ் நகரில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் உண்மையில் ஆகஸ்ட் 1947 இல் நேருவுக்கு வழங்கப்பட்டது.

மவுண்ட்பேட்டன், ராஜாஜி & நேரு ஆகியோர் இந்த செங்கோலை பிரிட்டிஷ் அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்றியதற்கான அடையாளமாக விவரித்ததற்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

செங்கோல் பின்னர் அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. டிசம்பர் 14, 1947 அன்று நேரு அங்கு சொன்னது என்னவோ (அந்த செங்கோல் நேருவின் கைத்தடிதான்) அதுதான் அந்த அலகாபாத் அருங்காட்சியகத்தின் லேபிள் பொதுப் பதிவேடு" என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்து இருந்தார்.


இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றொரு வெட்கக்கேடான அவமானத்தை காங்கிரஸ் செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "திருவாவடுதுறை ஆதீனம், ஒரு புனித சைவ மடம், இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் செங்கோலின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியது. ஆதீனத்தின் வரலாற்றை போலி என்கிறது காங்கிரஸ். கொஞ்சமாவது காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஏன் இவ்வளவு வெறுக்கிறது? இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் தமிழ்நாட்டின் புனித சைவ மடத்தால் பண்டித நேருவுக்கு ஒரு புனிதமான செங்கோல் வழங்கப்பட்டது, ஆனால் அது ஒரு 'வாக்கிங் ஸ்டிக்' ஆக அருங்காட்சியகத்திற்கு வெளியேற்றப்பட்டது" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amit Shah say Congress another shameful insult The Thiruvaduthurai Adheenam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->