சமத்துவ மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகி திடீரென உயிரிழப்பு.. சோகத்தில் சரத்குமார்.!! - Seithipunal
Seithipunal


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகியும், முன்னாள் சீர்காழி சட்டமன்ற தொகுதி முன்னாள் வேட்பாளருமான பிரபு மாரடைப்பால்  காலமானார்.

இந்நிலையில், பிரபு மறைவுக்கு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியச் செயலாளரும், சீர்காழி சட்டமன்ற தொகுதி முன்னாள் வேட்பாளருமான திரு.R.பிரபு அவர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.

என் மீதும், இயக்கத்தின் மீதும் தீராத பற்று கொண்டு, அயராது உழைத்தவரின் மறைவு என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈடு செய்ய முடியாத பிரிவை தந்து மறைந்த பிரபுவை எண்ணி வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார் உறவினர்களுக்கும், இயக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AISMK Party members passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->